Saturday, September 24, 2011

கோவிந்தா !கோவிந்தா! சென்னையில புது பொண்ணு !!!





வழக்கம் போல ! நான் சுய நினவு இல்லாமல் எழுதிய பதிவு .
என்னை அடிக்கவோ !உதைக்கவோ! விரும்பினால் ...
கமெண்ட் போடவும் ....(நாங்க எல்லாம் !அட்ரஸ் குடுத்தால் போதும்
தேடிவந்து !உதை வாங்குவோம் !! ஹி!ஹி!ஹி!ஹி!)
 

 ----------------------------------------------------------------


கவிதை 



ஒரு அரசியல்வாதி  கல்லறை  முன்பு !!!
-------------------------------------------------


தயவு  செய்து !!!
கை!தட்டி!!விடாதிர்கள் !!!
இவன் எழுந்து விட போகிறான்!!!
 
-யாரோ சொன்ன கவிதை !!!-



----------------------------------------------------------------
கவிதை விளக்கம் :
------------------------------------------------
 சென்னை: சட்டவிரோத மணல் கொள்ளை மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரவாக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கிட்டத்தட்ட ரூ. 1000 கோடி வரை சம்பாதித்திருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் ரூ. 238 கோடி வரை அவர் சம்பாதித்து வைத்திருப்பது முதல் கட்டமாக தெரிய வந்துள்ளதாம்.
காவிரி மணல் படுகையில் கிட்டத்தட்ட அதன் சுற்றுச்சூழலே பாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய அளவில் மணலை சட்டவிரோதமாக அள்ளி பணம் பார்த்துள்ளாராம் கேசிபி.
காவிரி மணல் படுகையில் கிட்டத்தட்ட 350 ஏக்கர் பரப்பளவில் மணலை வாரி எடுத்துள்ளனர் கேசிபியும் அவரது கூட்டாளிகளும். அரசு கணக்குப்படி அவர் ரூ. 49 கோடி அளவிலான மணலைத்தான் அள்ளியுள்ளார். ஆனால் வெளிச் சந்தையில் விற்ற வகையில் மட்டும் இந்த ரூ. 238 கோடியை அவர் பார்த்துள்ளார்.




 

Post Comment

Wednesday, September 21, 2011

உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

அப்துல்கலாமின் அசத்தல் பேச்சு !!!!!

பெருமக்களே, மாணவர்களே, இளைஞர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
 
எண்ணங்கள் செயலாகின்றன.
ஒரு பெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது
தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நிணைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்? ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும்
போது அலெக்சாண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.
ஏன் கடலின் நிறமும், அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கின்றது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம்

செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்த கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கான பதில் தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான்
சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது.
ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். 
இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் 
வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா, உங்களையும்

மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த
வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் என்பது தான் அதன் அர்த்தம்.


நாம் வாழ் நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும் போது நமக்கு வாழ்வில் ஒரு

இலட்சியம் வேண்டும்.

அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம்

உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.



நீங்கள் எல்லோரும் வெற்றியடைய, வளமான வாழ்வு பெற ஒரு சிறு கவிதை மூலம் என் கருத்தை

உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த கவிதையின் தலைப்பு, "வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்" என்பதாகும்.
நான் பறந்து கொண்டேயிருப்பேன்

நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன்,
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும்

பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும்.

நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய். நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன்,

வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும்,
கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால்
வெற்றியடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது நானும், என் இனிய நண்பன் ராமசாமியும் பக்கத்தில் உட்கார்ந்து இருப்போம். அவரது வீட்டில் தான் மின்சாரம்

இருந்தது, பரீட்சைக்குப் படிக்கும் போதெல்லாம் அவரது வீட்டுக்கு சென்று தான் படிப்பேன். எங்கள் இருவரது குடும்பத்திற்கும் பல்வேறு நிலையில் வேற்றுமைகள்
இருந்தாலும், ஓர் ஒற்றுமை இருந்தது. அது எங்களுடைய பெற்றோர்கள் நண்பர்கள் என்பது தான். எனவே, நாங்களும் நண்பர்களாக இருந்தோம். நானும், என்
நண்பனும் படிப்பிலும் எண்ணங்களிலும் ஒரே விதமாக செயல்பட்டோம்.

1936-40-ம் வருடங்களில் பரீட்சை சமயத்தில் பகல் நேரங்களில் என்னுடைய வீட்டில் நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்போம். இரவில் அவரது

வீட்டில் சேர்ந்து மின்சார ஒளியில் ஒன்றாக படிப்போம். படித்து, படித்து முன்னேறினோம். பல தடைகள் எங்கள் முன்னேற்றத்தை தடு்க்கவில்லை. அது
எவ்வாறு முடியும்.

பினாச்சியோ என்ற பிரஞ்சு கவிஞர் சொல்கிறார்.


நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,

நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்

என்னுடைய கருத்து என்னவென்றால் உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய

உழைப்பு முக்கியம், உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.
மாணவ நண்பர்களே, உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன? எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், கலெக்டர், ஆசிரியர், தொழில் அதிபராக கனவு
காண்கிறீர்கள்? எத்தனை பேர் விண்வெளியில் நடக்கவும், சந்திரனிலும், செவ்வாய் கிரகத்திலும் நடக்க விரும்புகிறீர்கள்? 



கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை நான் 1.2 கோடி இளைஞர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இருக்கிறேன், அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் இளஞர்கள் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்களாகப் போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு 100 இளைஞர்கள் கையைத் தூக்கினார்கள்.


எத்தனை பேர் சந்திரனுக்கும், வியாழன் கிரகத்திற்கும் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன், அனைவரும் கையைத் தூக்கினார்கள். எத்தனை

பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். 50 இளைஞர்கள் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள்.
அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு மாணவன் இந்தியாவை 10 ஆண்டுக்குள்
வளர்ந்த நாடாக மாற்றுவேன் என்று சொன்னார். லஞ்சத்தை ஒழிப்பேன் என்று ஒரு மாணவி கூறினார். இன்னொரு மாணவன் - இளைய சமுதாயத்தை என்னால்
முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன், அப்படியென்றால் இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை
உருவாக்குவேன் என்ற நம்பிக்கையை கொடுப்பேன் என்றார். எங்கு சென்றாலும் இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன்.


எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள் தான்.

எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய

சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும்.



பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் மனஎழுச்சி கொண்ட இளைஞர்கள் தான் மிகப் பெரிய சக்தி. இந்தியா

60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஒரு வகையில் மக்கள் தொகை இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.

உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. கனவு காண்பது ஒவ்வொரு குழந்தையின்,

இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம்
நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவைப்பெற அதை தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.

அறிவைப் பெற்று அறிவார்ந்த சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்றால் அதற்கான அறிவின் இலக்கணம் என்ன என்று பார்ப்போம்.

அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா. அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அது என்னவென்றால், அதற்கு ஓரு
சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அறிவு = கற்பனை சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி


 

கற்பனை சக்தி

கற்றல் கற்பனைச் சக்தியை வளர்க்கிறது

கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது
சிந்தனை அறிவை வளர்க்கிறது
அறிவு உன்னை என்ன ஆக்குகிறது? தெரியுமா?..........
மகானாக்குகிறது.

கற்பனை சக்தி உருவாவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும் தான் மிக முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலை உருவாவதற்கு என்ன

வேண்டும், ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும்.

மனத்தூய்மை


எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்

நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை இருந்தால்
உலகத்தில் அமைதி நிலவும்.

எல்லாவற்றிக்கும் அடிப்படை மனத்தூய்மை என்பதை இச்சிறு கவிதை மூலம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.


மனத்தூய்மை எங்கிருந்து வரும். மூன்றே மூன்று பேர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யார்? அவர்கள் தான் தாய், தந்தை மற்றும்

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்.

உள்ள உறுதி



புதிய எண்ணங்களை உருவாக்கும் உள்ள உறுதி இன்று என்னிடம் உள்ளது. எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன். முடியாது என்று எல்லோரும் சொல்வதை என்னால் முடியும் என்ற மன உறுதி என்னிடம் உருவாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்ய முடியும் என்ற உள்ள உறுதி என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது.

 
நண்பர்களே, உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி வரும், யார் மூலம் வரும். நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், ந்ல்ல புத்தகங்கள்

இவைகள் உள்ளத்தில் உறுதி பெற வைக்கும். அது நாம் எக்காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியும்,
நம்பிக்கையையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைவீர்கள்.

நீங்கள் என்னை
www.abdulkalam.com என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.

கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.


Thanks-Thatstamil



Post Comment

Tuesday, September 20, 2011

"மத்திய அமைச்சர்களின் மற்றும் பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' மத்திய அரசு அதிர்ச்சி !!!!!

என் அருமை இனிய நண்பர் ,
சாதனைகளின் சொந்தகாரர்  அனு முத்து கிருஷ்ணன் .
அவர்களின் சாதனை சிகரம்
அனு போஸ்ட் கார்டு மக்சின்.
ஒரு போஸ்ட் கார்டு மூலம் உலகை வென்றவர் .
அவரின் சாதனைகளை காண ...
http://anupostcardmagazine.blogspot.com
செல்க !இவரின் அன்பை வெல்க !!
தங்கமான மனிதரின் தங்கமான  படைப்பு.......



---------------------------------------------------------------------------------
ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் நகராட்சி பள்ளி

போடியில் நகராட்சி ஆரம்பப் பள்ளியில், ஒரே ஒரு மாணவர் படிக்கிறார். ஆரம்பப் பள்ளி துவங்கி 50 ஆண்டுகளாகிறது. ஆரம்பத்தில் 800க்கும் அதிகமான மாணவர்கள் படித்தனர். ஒரு தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மற்றும் 7 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். 

இக்கல்வியாண்டில் 5ம் வகுப்பில், ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார். பிற வகுப்பில் மாணவர்கள் இல்லை. இவருக்கு பாடம் நடத்த ஒரு தலைமை ஆசிரியர் பணிபுரிகிறார். 
காரணம் என்ன: பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைவிற்கு தொடக்கக் கல்வித் துறை ஆர்வம் காட்டாததே முக்கிய காரணம்.  ஆசிரியர்கள் பதவி உயர்வை காரணம் காட்டி, வேறு பள்ளிக்கு பணி மாறுதலில் சென்றுவிட்டனர். இப்பணியிடத்திற்கு வேறு ஆசிரியரை நியமிக்கவில்லை.

தலைமை ஆசிரியர் மல்லிகா கூறுகையில், "தற்போது இரு மாணவர் படிக்கின்றனர். ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். மாணவர் சேர்க்கைக்கு என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். அதிகாரிகளுக்கும் தகவல் தந்துள்ளேன்,' என்றார். 
---------------------------------------------------------------------------------------------------------
வங்கிகள் கல்விக்கடன் தர மறுத்தநிலையில், மத்திய அரசின் ரூ.41 லட்சம் கல்வி உதவித்தொகையுடன், மதுரை மாணவர் இளமாறன், லண்டனில் எம்.எஸ்சி., படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.
அப்பா காய்கறி வியாபாரி, அம்மா கூலித்தொழிலாளி. எங்கள் குடும்பத்தில் நான், முதல் பட்டதாரி. மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வதற்கு வங்கிகள் கடன் தர தயங்கின. இந்தநேரத்தில் தான் வெளிநாட்டு படிப்புக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை அளிப்பது தெரியவந்தது. கருத்தரங்குகளில் பங்கேற்றது, ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தது ஆகிய காரணங்களால் என்னை தேர்வு செய்தனர். லண்டன் பெட்போர்ஷையர் பல்கலையில் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்கச் செல்கிறேன். விசா எடுத்து கொடுப்பது முதல், தங்குமிடம், உணவு, கல்விக் கட்டணம் அனைத்திற்கும், ரூ.41 லட்சம் செலவாகும். அதை மத்திய அரசே வழங்குகிறது. செப்.,19ல் லண்டன் செல்கிறேன். எனக்காக செலவு செய்த அரசுக்கு நான் செய்யும் நன்றிக்கடன், படித்து முடித்தபின், இந்தியாவிலேயே சேவை செய்வது தான், என்றார். இது அறிவியலுக்கு கிடைத்த பெருமை. மதுரை மாணவருக்கு கிடைத்த பெருமை தானே. 
------------------------------------------------------------------------------------------------

நான் எழுதுவது  கவிதை அல்ல ! உண்மை !
ஆடுகளம்

வயிற் நெறைய  உணவு !!!!
சந்தோசப்பட்டது !
கசாப்பு  கடை  ஆடு !

----------------------
நான் discovery சேனல்லில்  பார்த்த பொது அதிர வைத்த வசனம் :
ஒரு குட்டி யானை தனித்து விடப்பட்டு சிங்ககூட்டத்திடம்  
தனியாக மாட்டியது .உயிரோடு உணவானது !
அப்போது ............
பின்னணியில் ஒலித்த குரல் ....இப்படி சொன்னது .....
இந்த காட்டில் பலம் குறைந்த ,வயதான ,எந்த மிருகத்துக்கும்
வாழ உரிமையும் தகுதியும் இல்லை.அவைகளுக்கு  உணவு கெடைக்கும்
வரை வாழும் .முடியாவிட்டால் மற்றவைக்கு உணவு ஆகிவிடும் .
எந்த விதியை எல்லா மிருகங்களும் நன்றாக உணர்த்து உள்ளன .
(இது நமக்கும் பொருந்தும் அல்லவா!!)

----------------------------------------------------------------------------

எனக்கு நன்றாக தெரியும். .....
எனக்கு நன்றாக புரியும் .....
நான் பேசுவதையும் சொல்வதையும்...
ஒரு பய மதிக்க மாட்டான்!!!!
ஒரு சிறு பயனும் இல்லை என்று !!!
இருந்தாலும் நான் சொல்ல வேண்டியுள்ளது...  
என்ன செய்ய!!!!

பெட்ரோல் விலை உயர்வு!!!! ஜெயலிதா கண்டனம்!!!!      

---------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
ஏன் எல்லாரும் நல்ல படித்தாலும் ஐ.ஏ.எஸ்., ஆவதில்லை!!!!!!
குறிக்கோளில் தெளிவு வேண்டும்
ஐ.ஏ.எஸ்., படிப்பது பற்றி
பொதுவாக நல்ல மதிப்பெண்களுடன், ஐ.ஏ.எஸ்., தயாரிப்பையும் மேற்கொள்பவர்களுக்கு பெரும்பாலும் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்துவிடும். உடனே, அவர்கள், ஐ.ஏ.எஸ்., ஆசையை மறந்து, கிடைக்கும் வேலையில் அமர்ந்து விட்டு வருடங்கள் வீணாக்கி, திடீரென பழைய உந்துதலில் பயிற்சிக்குத் திரும்புவர். அதற்குள் அவர்களின் முந்தைய உந்துதலும், பாடத் தயாரிப்புகளும் நீர்த்துப் போயிருக்கும்.கற்ற பாடம், கிடைத்த கேம்பஸ் இன்டர்வியூ வேலை, குடும்ப நெருக்கடி, பொருளாதார வசதி இவற்றை பேலன்ஸ் செய்து, மாணவர்கள் தங்கள் திசையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
------------------------------------------------------------------------------------------------------
 Thanks-Dinamalar

பரபரப்பான ஒரு சிந்தனை பதிவு :

நமது  அடுத்த  பதிவு  இன்று மாலை 5 மணி முதல் ...

படிக்க தவறாதீர்.........

உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

அப்துல்கலாமின் அசத்தல் பேச்சு !!!!!
Execulive news : படித்தவர்கள்  சொல்கிறார்கள். ஒரு கப் " டி "  ய்டன் ஒரு பொன்மாலை  பதிவு

தமிழ்வாசி - Prakash said...
எம்மாம்பெரிய பதிவு.... சிறந்த கட்டுரையை பகிர்ந்துள்ளீர்கள்.
FOOD said...
வாழ்த்துக்கள் ஞானேந்திரேன். நல்ல பகிர்வு.
Delete
Rathnavel said...
வாழ்த்துக்கள்.
ப்படி இவர்கள் பாராட்டிய  அந்த பதிவு -

இன்று மாலை 5 மணி முதல்


Post Comment

Thursday, September 15, 2011

அட !!! அஞ்சாம் வகுப்பு படித்தால் போதும் !! இப்பவே!! உங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர் சம்பளம் ரூபாய் 55,000 /- ரெடி ...

இந்த பதிவில்  காணப்படும்  கருத்துக்கள்  அனைத்தும் ..
என் சொந்த கற்பனை மட்டுமே!!
இப்போது உயிர்ரோடு ,அல்லது  மறைந்த  எவரையும்  குறிபிடுவன   அல்ல !!!!!
யாராவது  என்னை உதைக்க  விரும்பினால்!!  ஆள்   வைத்து  அடிக்க விரும்பினாலும் !!!
நான் அம்புட்டு  வோர்த்து  இல்லைங்க !!! ஆனா உங்க கருத்த மட்டும்  பதிவு  பண்ணுங்க .!!
பொறுப்ப பதில்  சொல்வேங்க !!!! 

அம்புட்டு தானுங்கோ!!!!! 
 

அஞ்சாம் வகுப்பு  படித்தால் போதும் .
உங்கள்கு சம்பளம்  சாப்ட் வேர்  இஞ்சினியர்  சம்பளம்  ரூபாய்   55,000 ரெடி .....

உண்மைதான் . சும்மா இல்லை!!!நம்ம  கவர் மென்ட் ஆர்டர் அப்படி ....
தகுதி : சுமாரான படிப்பு !! ரொம்ப  சுமாரான  பொது அறிவு ...
பணியிடம் : தமிழக  சட்ட சபை .....
வேலை:- அப்படி  கேளுங்க!!!

நம்ம  சட்ட மன்ற  மேஜய்  தட்டும் வேலை ...
புரியல !!! கொஞ்சம்  விளக்மா  சொல்லவா ....

நண்பா...யாராவது  பேசுனா... புரியலயா ..உடன் மேஜய் தட்டனும் !.....
கண்டிப்பா வெள்ளை வெட்டி ,வெள்ளை சட்டைதான்  போடணும் !!...
கசாப்பு கடை  ஆடு  மாத்ரி  முழிக்கணும்!!! ....
பொது அறிவு  சுத்தம் .சுத்தமா  இருக்க  கூடாது..!!!..
எதையாவது   எழதி வச்சி  தான் ....படிக்கணும் .!!
முக்கியமா  கருப்பு  கண்ணாடி  போடணும் .!!!..
ஊரு பக்கம்  தலை  கட்ட கூடாது....!!!
தின்னா  தமிழு!  துங்கனா  தமிழு!  தேவை  இல்லமா... பேசுனும்!!!...
முக்கியமா  டெய்லி  டை அடிக்கணும் .!!!!..
எதுக்கு போறோம்  என்று தெரியாமல் ...சட்ட மன்றத்துக்கு  போகணும் !!!!.
அங்க!!!என்ன பேச...போறோம்  என்று தெரியாமல் ....... 
க்வாட்டர்  அடித்த  குரங்கு  போல  உட்காந்து  இருக்கணும் ..
வேற வேலை  இருந்தா  ஒபி  அடிக்க வெளி நடப்பு செய்யணும் .
புள்ளைகளை கான்வென்ட்  படிப்பு  படிக்க  வைக்கணும் ..
வெருப்பா  இருந்தால் ....வெளிநாடு  போகலாம் ...
குளிர இருந்தால் கொடைக்கானல்  போகலாம் ..!!!
எதிர்கட்சி  ஆள்களை  பார்த்தால்!!!
இஞ்சி  தின்ன  மங்கி  போல .எப்பொதும் ...
முகத்தை  உம்ம்னு  வைக்கணும் !!!!
எங்க போனாலும்..  முக்கா லூசு  மாத்ரி  வேகமாக தான்  போகணும்... .நடந்து .. போனாலும் ...கூட..
எப்ப பார்த்தாலும்  புரியாத  மாதிரி  பேசியும் .!!!..
புள்ளி விபரம்  சொல்லியும்  கடுப்பு  ஏத்தனும்!!!! 
எந்த மேடை...கெடைத்தாலும் காட்டு எருமைக்கு ... 
கரண்டு ஷோக் குடுத்த  மாதரி கத்தனும் .!!!!!...
யாருக்கும்  எந்த  நல்லதும்  செய்ய வேண்டாம் !!!
இந்த தகுதிகள்  உங்களக்கு  இருந்தால் மட்டும்  தான்  இந்த வேலை  கிடைக்கும் ...
உங்கள்கு எப்படி வசதி !!!!


பின் குறிப்பு :சென்னை, செப்.14: எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதன் மூலம்,மாதச் சம்பளம் மற்றும் படிகள் 50,000 ரூபாயிலிருந்து 55,000 ரூபாயாக உயரும்.

கொசறு  செய்தி: நம்ம  எதிர்கட்சி  தலிவர்  விஜயகாந்து  சம்பளம்  எம்புட்டு தெரியுமா ?
ரூபாய் ---31,500 /-


EXECLIVE அடுத்த பதிவு  கவெர்னர்  வேலை  காலி !!! ஆர்   யு  ரெடி ???????? (ன்னும்  விக்கமாக)



Post Comment

Monday, September 12, 2011

பசியில் உயிர் பிரிந்தாலும் பிச்சை எடுக்கக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன்


என்னை பாதித்த செய்தி:- இல்லை சாதித்த  செய்தி........


ஓவியத்தை வரைந்துக் கொண்டிருந்த மணிகண்டன்

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை
பெசன்ட்நகர், வேளாங்கண்ணி ஆலயத்தின் தேர்திருவிழா களைகட்டியிருந்தது. அன்னை மரியா பவனி வரும் தேரை பார்வையிட வந்தவர்களை அதிகம் கவர்ந்தது, எலியட்ஸ் பீச் சாலையில் வரையப்பட்டிருந்த சிலுவை நாயகன் ஓவியம்தான். இரண்டு கால்களையும் இழந்த வாலிபர் ஒருவர், சிரத்தையுடன் தான் வரைந்த ஓவியத்திற்கு கரி துண்டால் வண்ணம் கொடுத்துக் கொண்டிருந்தார்.....
சேலத்தை அடுத்த தொப்பூர், உப்பாரப்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மனைவி சின்னமயில். இவர்களின் மகன்தான் ஓவியத்தை வரைந்துக் கொண்டிருந்த மணிகண்டன். குடும்ப வறுமை காரணமாக, இரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய மணிகண்டன், ரயில்களில் குழந்தைகளுக்கான புத்தகங்களை விற்று குடும்பத்திற்கு உதவி வந்தார். கடந்த 2004ம் ஆண்டு ரயில் விபத்தில் இரண்டு கால்களை இழந்தார். அதன் பிறகு செய்த தொழில் கைவிட்டுபோனது.வறுமை குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டிலிருந்து வெளியேறிய மணிகண்டன் ஈரோடு சாலையில், ஒரு நபர் சாக்பீஸ்களால் வரைந்த படம் கவர்ந்தது. அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார். தற்போது, சாலைகளில் ஓவியம் வரைந்து சம்பாதித்து தனக்கும், குடும்பத்திற்கும் தேவையான பணம் சம்பாதித்து வருகிறார்....
இரு கால்களை இழந்த நிலையில் பிச்சை எடுத்து வாழாமல், தனது திறமையைக் கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் "நடை'போடும் மணிகண்டன் கூறியதாவது: விபத்தில் இரண்டு கால்களையும் இழந்தபின், எனது வாழ்க்கையே இருண்டுபோனது. குடும்ப வறுமை காரணமாக, வீட்டைவிட்டு வெளியேறி சாப்பாட்டிற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். பசியில் உயிர் பிரிந்தாலும் பிச்சை எடுக்கக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன். மனம்போன போக்கில் திரிந்தேன். அப்போது, ஈரோடு பஸ்நிலையத்தில் அப்பாச்சிமுத்து என்பவர், சாலையில் வரைந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவரிடம் மூன்று மாதம் சாலையில் வரையும் ஓவியம் தொடர்பான பயிற்சி பெற்றேன்.

தற்போது, சாலையில் ஓவியம் வரைந்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். தமிழகத்தில் எங்கெங்கு திருவிழாக்கள் நடக்கிறதோ அங்கு சென்று படம் வரைவேன். இதன் மூலம் மாதம் நான்காயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். என் தேவைக்கு போக மீதியை எனது குடும்ப செலவிற்கு அனுப்பி விடுகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தரும் உதவிக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆர்.சீனிவாசன்
நன்றி -தினமலர்



 

உணவு உலகம்  திரு சங்கரலிங்கம் அவர்களின்  
அன்பு தாயார்  மறைவிற்கு...

என் ஆழ்ந்த  இரங்களையும் .... மற்ற அனைத்தையும்விட தாயைப் பிரிவது என்பது ஈடுசெய்யமுடியாத இழப்புதான். 

தங்களுக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..தங்களின் துயர்வுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இதை தவிர தங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்தைகள் ஏதும் அறிதிடேன் யாம்.




picture corner -what a work 


Post Comment

Sunday, September 11, 2011

comedy corner--பதிவர் உலகில் முதன் முதன்லாக ரூபாய் மூன்று லட்சம் வென்ற நம்ம ராமசாமி ...


இனிய எச்சரிக்கை: இந்தப்பதிவு யாரையும் குறை  சொல்லி   எழுதப்பட்டதல்ல ....நான் பதிவு உலகில்  மதிக்கும்  பன்னிக்குட்டி ராம்சாமி -பதிவுக்கு
என் பதில்  பதிவு ....அம்புட்டுத்தான்  சாமியோ-....

இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி....

என்ற  நம்ம பன்னிகுட்டி ராமசாமி  எழுதிய  பதிவு  படிச்சு
அப்பாடிய ஷாக் !!!! ஆகிட்டன்.. அப்புறம்  முட்டத்தா வெறிச் பார்த்து  எழுதுன  கொலை வெறி  பதிவ் இது...
நாங்களும் வெளக்கம் சொல்லுமோவில்லை .!!!!....
பதிவர்  உலகில்  முதன் முதன்லாக ரூபாய்  மூன்று லட்சம்  வென்ற  நம்ம பன்னிகுட்டி ராமசாமி 
ஆம்மாம் தலைப்பு  எப்ப்டி!!!!!ஆனா  உண்மைதான் ...அவரோட -

இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி..... என்ற பதிவுக்கு ---300  ---கமெண்ட்ஸ் வாங்கி சாதனைபடைத்து உள்ளார் ...

ஒரு பதிவர் ஒரு லட்சம்  மதிப்பு  என்ன்றால் 300  க்கு  3  லட்சம்  ..கணக்கு  சரிதான் ..



-இனி விளக்கம்-
வரவர தமிழ்மணம் பக்கம் போகவே பயமா இருக்கு சார். இப்போ வர்ர பதிவுகளோட தலைப்பெல்லாம் பாத்தா உடனே பதறிப்போய் ஓப்பன் பாக்கற மாதிரியே இருக்கு. உள்ள போய் பாத்தா சம்பந்தமே இல்லாம என்னென்னமோ மொக்கையா... என்னத்த சொல்ல? இப்படி எத்தன வாட்டிதான் பல்பு வாங்கறது? இதப் பாத்தா பஸ் ஸ்டாண்டு பொட்டிக்கடைகள்ல பேப்பர் தலைப்புகளை பாத்துட்டு பேப்பரை வாங்கி படிச்சு நொந்து போய் பேப்பர்ல பஜ்ஜிய கசக்கி தூக்கி போடுறதுதான் ஞாபகம் வருது. மொக்க போடவேண்டியதுதான், இங்க நிறைய பேரு அதான் பண்ணிட்டு இருக்கோம் அதுக்காக ஏன் சார் இப்படி தலைப்புலேயே கொல்றீங்க?

 

நண்பா... ஆபீஸ் கம்ப்யூட்டர்ல ..நேரம்  கெடைதால்...பதிவு எழ்தும்  பதிவர் நான். தமிழ் மணம் பக்கம்  போய்
செலக்ட்  பண்ணி  படிக்கும் ..உங்கள்கல்க்கு  இது காமெடியா !!!!தெரியலயா ...தமிழ்மணம்  என்பது  நம்பர் ஒன்
காவியம்  படைக்கும் ..தத்துவம்
படைக்கும்..உலகை மாற்றும் அல்லது உங்களை மாற்றும்  படைப்பாளிகளை 
வரிசைபடுத்தும்...திரட்டி  அல்ல !!!!மொக்கை  போடுவதில்  யார் ? பேஸ்ட் என்பது தான் முக்கியம் ....தலைப்பு  என்பது பதிவுகளின் கண்  போன்றது ...உங்களை பதற விட்டால்தான்  ..
ழுதியவன்  வெற்றி  பெறுகிறான் ...
அது அவன் திறமை ..பதிவு உலகில் எல்லாரும் வைரமுத்து , சுஜாதா ,பாலகுமாரன்  அல்ல ...இது ஒரு  போட்டி
உள்ள உலகம் ..உங்களை  இணைய படிப்பாளியா  இல்லாமல் 
இணையபடைப்பாளிகளை  உருவாக்கும்  கூகுள்
ப்ளாக் ..ஒரு  அருமையான  வாய்
ப்பு அம்புட்டுதான் .   பயன் படுத்தி பலன் பெறுங்கள் . உங்களை  தேடி  படிக்க நீங்கள்  என்ன  பெரிய  அப்பா டக்கர!!!! அப்படி பார்த்தல்  வள்ளுவர் ,விவேந்தர்   ப்ளாக்  தொகினால் ..அவர்கள்
மைன்ஸ் ஒட்டு கூட வாங்க மாட்டர்கள் .
காந்தி  சுய சரிதை  ருபீஸ் ஜஸ்ட் 20 /- தான் ..வாங்க ஆளில்லை..சர்வோதைய
புக் ஷாப்ல் ....
..முக்கியமாக  சொன்னால்  இது உங்கள் பர்சனல் டைரி..
என்ன !!! எல்லாரும் படிக்க கூடிய  டைரி  அம்புட்டுத்தான் ...இது பஸ் ஸ்டாண்ட் பொட்டிகடை  தான் ..புக் ஷாப்  அல்ல !!!இங்கு குமுதம் ,அனந்த விகடன் , ஜூனியர் விகடன்  தான்
கிடைக்கும் ...உங்கள்கு எது தேவை  என்பதை
நீங்கள் முடிவு செய்யுங்கள் ..அதை வீட்டு  குறை  கூறாதீர்....புத்தி  கூறுங்கள் ..போக பையமாய் இருக்கிறது
என்பது நியயமா  நண்பா ??
எந்த  குழந்தையும்  
எழ்தும்  முதல்    பக்கம்  அசிங்கமாக தான்  இருக்கும் .. முடிந்தால்  தட்டி  குடுங்கள் ..
ஊக்க  படு
த் துங்கள் ......திருத்து ங்கள் ...எங்கள் பதிவு உலகம் எங்களை!!!!  என்ன சொல்வது ...அதய் விடுங்கள் நாங்கள் உங்களை  கொல்ல தான்  போகிறோம் .அப்புறம் ..எங்கள் எழ்த்து உங்களை வாழவா வைக்கும் ....
அது உண்மை தான்  நண்பா ..முடிந்தால்  தப்பித்து  கொள்ளுங்கள் ...



அப்புறம் இன்னொரு குரூப்பு இருக்கானுக, இவனுங்க ஈ-மெயில்லேயே கொல்வானுங்க...... அதுவும் 100- 200 பேருக்கு ஒண்ணா அனுப்புவானுங்க. முன்னபின்ன தெரியாத ஆளுகளுக்கு வரிசையா சரமாரியா எப்படித்தான் மெயில்ல இப்படி அதுவும் ப்ளாக் லிங்க போட்டு அனுப்புறானுங்களோ? டூ அட்ரஸ்லேயே 50-100 பேர் அட்ரசை போட்டு bcc கூட போடாம அப்படியே வேற அனுப்புறாங்க........ இதாவது பரவால்ல... சிலபேரு அதை அப்படியே செயினா மாத்தி வரிசையா ரிப்ளை டூ ஆல் போட்டு ஆளாளுக்கு என் பதிவுக்கு வாங்க என் பதிவுக்கு வாங்கன்னு மாத்தி மாத்தி அடிச்சி இன்பாக்சை கொத்து பரோட்டா பண்ணி வெச்சிடுறாங்க...

விளம்பரம் !!தனி கலை  நண்பா ....ஒரு பதிவு  எழ்தி அதை படிக்க வைக்க ....மக்கா முடியல  நண்பா !!!இப்படி ஒரு ஐடியா இருகிறதை !!!!  ஏன் நண்பா ....முன்னடிய் சொல்ல வில்லை ....உலகில  முதன் முதலாக  எந்திரன் பட trialer  ...
சன் டிவில மட்டும் போட போறோம் ..அப்படின்னு காலநிதி சொல்லி நம்மலை காமெடி பிசா  ஆக்குன..மாதரி ...
வேற யார்ரு போட முடியும்  நண்பா ....அவிங்க படத்த அவிங்க தான  முதிலில்  போட முடியும் ...என்னக்கு புரியல நண்பா .....அந்த கொடுமைக்கு இது பரவாயில்லை .....

அடுத்து ஒரு குரூப்பு இருக்கு.... அவனுங்க வேலையே கமெண்ட்ல வந்து வெளம்பரம் போடுறது......  ஏன்யா ப்ளாக்கர நமக்கு ஃப்ரீயா கொடுத்த  கூகிள்காரனே வெளம்பரத்துக்கு காசு கொடுக்கிறான், ஆனா நீங்க பாட்டுக்கு வந்து பதிவை படிக்கிறீங்களோ இல்லையோ ஒரு டெம்ப்ளேட் கமெண்ட்ட போட்டுட்டு ஓசில வெளம்பரம் வேற போட்டுக்கிறீங்க..... என்ன நியாயம் சார் இது? ஒரு சீரியஸ் பதிவு, பதிவர் ரொம்ப வருத்தமான ஒரு விஷயத்தை பத்தி எழுதி இருந்தார், அங்க ஒரு விளம்பரதாரர், பதிவு சூப்பர் அப்படியே என் பதிவுக்கு வாங்கன்னு கமெண்ட் போடுறார். இது எவ்வளவு அநாகரிகமா இருக்கு? வளரும் பதிவர்கள் வெளம்பரம் போடுங்க... வேணாம்னு சொல்லலை, ஆனா இடம் பொருள் பாத்து போடுங்க, பதிவை படிச்சு உங்க கருத்தை சொல்லிட்டு விளம்பரம் போடுங்க சார்.

 
என்னமோ!!! என்னிக்கு  ரொம்ப  
ரொம்ப நல்ல  நல்ல  ஐடியா  குட்கிறிங்க!!!! நன்றி ...பதிவை படிச்சு உங்க கருத்தை சொல்லிட்டு விளம்பரம் போடுங்க சார். 
இது  ரொம்ப சரி  .....தலை  வணங்கி  ஏற்ற்று  கொள்கிறோம் ....(நானும் புதிய பதிவர் என்ற முறையில் )
ஆகா இதுவும் சூப்பர் ஐடியா !!!!!
 
 நீங்க பண்றது தப்புன்னு சொல்ல வரலை. ஆனா கமெண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் சுவராசியமா, நகைச்சுவையா, கிண்டலா, நக்கலா..... ஜாலியா கலாய்ச்சு இருந்தா எப்படி இருக்கும்? ட்ரை பண்ணுங்க சார்.. ட்ரை பண்ணுங்க........!

 

நாங்க  என்ன வசுக்கிட்டு வஞ்சனையா பண்ணுகிறோம் சார்  !!!! இருந்தாதான் (சாரி!!!  சாரி !!!! தமிழ் ட்ய்பிங்  தகராறு ) சட்டில  எர்ருந்தல்தான் அகபையில்..வரும் ...So  ட்ரை  பண்ணுகிறோம் சார் ....


என்னமோ போங்கப்பா, என்னால தாங்க முடியல.. அதான் சொல்லிட்டேன்.....

எச்சரிக்கை:
இந்தப்பதிவு யாரையும் குறி வைத்து எழுதப்பட்டதல்ல (அப்படி குறிவெச்சு எழுத ஒருத்தர் ரெண்டு பேரா இருக்கீங்க...?). அதுனால படிச்சிட்டு அவன் என்ன கிள்ளி வெச்சிட்டான், இவன் கடிச்சி வெச்சிட்டான்னு யாராவது கெளம்புனீங்க... படுவா........ தொலச்சிபுடுவேன் தொலச்சி..


என்னமோ போங்க சார் , என்னால தாங்க முடியல.. அதான்  நானும் சொல்லி புட்டன் ...

அம்புட்டுத்தான்
அன்புடன்
யானைக்குட்டி 


Post Comment

Tuesday, September 6, 2011

Yanaikutty-Notice Board - படிக்காதிங்க !! சிரிக்காதிங்க!!!-அப்ப!!! நான் என்ன சொன்னாலும் கேட்க!!!! மாட்டிங்களா??? சரி .... படியுங்கள் ஆனால் தனியா சிரிக்க கூடாது ...அம்புட்டுத்தான்!!!- (நான் அம்புட்டு சுமாரான பதிவருங்க அதான்!! )

"சபாஷ்' போடுங்க படித்தது பி.பி.ஏ.,; பார்ப்பது இயற்கை விவசாயம்: "சபாஷ்' போடுங்க; சாதனை இளைஞருக்கு-வணிக நிர்வாகப் படிப்பில் தேறி, லட்சக்கணக்கில் சம்பளம் பெற கிடைத்த வாய்ப்பை உதறி விட்டு, இயற்கை விவசாயத்திற்கு திரும்பியிருக்கிறார், ஏங்கல்ஸ்ராஜா என்ற இளைஞர்.டித்து முடித்தவுடன், மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில், பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது. அதை புறக்கணித்து விட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கி இருக்கிறார்.இயற்கை விவசாயத்தோடு, தொடுசிகிச்சையும் செய்து வருகிற ஏங்கல்ஸ் ராஜா. வாரத்திற்கு நூறு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்.பன்னாட்டு கம்பெனிகளில் அடிமையாக வேலை பார்ப்பதை விட, உள்நாட்டிற்குள் முதலாளியைப் போல், விவசாயம் பார்ப்பது சிறப்பானது. இந்த மண்ணும், மக்களும் தானே நமது முகவரி'' என்று பெருமிதப்படும் ஏங்கல்ஸ்ராஜாவின் வார்த்தைகளில் சாதித்த பெருமை வழிகிறது

தொடர் பதிவு--சில பதில்கள்
  விரும்பும் மூன்று விஷயங்கள்:

1 , என்னை  கேக்காமல்   இந்தியா எதுவும்  செய்ய கூடாது .....(PM   உட்பட) 

(நாடு திருந்தும் )
என்னை  கேக்காமல் என் மனைவி  எதுவும்  செய்ய கூடாது....(வீடு திருந்தும் )

2 , சோறு , வீடு , கல்வி , பயணம் , ஆரய்ச்சி.....அத்தனையும்  இலவசம் .....
எங்கள் மக்களக்கு..
விளக்கம்:-  (உன்  உழைப்பு  உன்  வீட்டுக்கு இல்லை........நாட்டுக்கு .......அதற்க்கு  ம ட்டும்   பாடு படு!!!! மக்காஸ்)......

3 ,
அரசு  பண்ணும்  அடுத்த  மூன்றவது விசயாம்:- இலவச  நவீன  கழிப்பறை  வசதி  அனைத்து வீடுகள்கு,
தெருக்களுக்கு  கட்டாயாம்   (ஊரு சுத்தமாகும் )

விரும்பாத மூன்று விஷயங்கள்:

  1. வறுமை
  2. வெறுமை -
  3. சிறுமை -
விளக்கம் :- பணம்  இன்மையால் -
 உயீர்வாழகிடைக்காத--நம்மை-காக்க-முடியாத--(வேலை /உணவு/மருத்துவம்)  - வறுமையாகும்  -
 
எதிலும்  நம்பிக்கை  இன்மை  -வெறுமையாகும்-
 
யாரையும்    இளிவாக  நினைப்பது -சிறுமையாகும்-

and one more
 
4-(கெட்ட வார்த்தைகள்  சுத்தமாக  i am not like this.....)

பயப்படும் மூன்று +மூன்று விஷயங்கள் :

மரணம் - me and all-so
Goverment  ஹோச்பிடல் பிணவறை
இருள் ...
தீ குளிப்பு  நியூஸ்
கடவுள் -  (what a lovely person ) .....அப்புறம் ....... .....அப்புறம்
*
*
*
*
என் மனைவி ( ஹி....ஹி.....ஹி....ஹி.....

புரியாத மூன்று +மூன்று  விஷயங்கள் :


1. நான்
2. கடவுள்
3. உலகம்
-----@-------
1. குடும்ப  செலவுக்கு என் மனைவி   இடம்  எவ்வளவு காசு  குடுத்தாலும்  மீதி  - இல்லை என்கிறாள் எப்படி ???
2. ஒருவர்  ஓரே   வேலையய் எப்படி அலுக்காமல்  20@30  வருஷமா  பார்கிரரர்கள் !!!!  (Example- நடத்துனர் , மில் வேலை , பேருந்து டிரைவர் , etc..........etc...........
3. சாவு  என்று  ஒன்று  உள்ளது .... என்று  தெரிந்தும் .......அடுத்த  உள்ளத்துக்கு  உதவி  செயயாமை......மற்றும்
பணம்  , வீடு  ......சொத்து  குவித்தல்.....

மேஜையில் உள்ள மூன்று++++++ பொருட்கள் :

காலவதியான  கிரெடிட்  கார்டு ...@...SBI  பேங்க்  ATM  கார்டு....ஹாட் பாக்ஸ்  இல் ஏழு இட்லி ....
இனி  மேல்  பாப்பா  வீட்டு பாடம்  நீங்கள்  செய்ய கூடாது ..என்ற  டீச்சர் மிரட்டும்  பாப்பா  ஸ்கூல்  டைரி...
எண்டா !!!வாங்கன    காசு  என்னாச்சுடா  ????  என்று   SMS  வந்து... வந்து ....ஆப்......  கி ......போன  என்  செல் போன்
அப்பாவுக்கு  மருந்து  வாங்க  காசு அனுப்பு  என்ற அம்மாவின்  லெட்டர் ....மனைவி கூட சண்டை  போட்டா
பொது வாங்கிய  பிரட் துண்ட்கள்  6  பீஸ்கள்......உடைந்து   போன  கொசுவர்த்தி  சுருல்கள்........மூடி இல்லாத
பேனாக்கள்.........போன  வருஷம்  கல்யாணம்  முடிந்து  ....எப்படி டிவர்ஸ்  வாங்குவது  என்று  யோசிக்கும் காலவதியான   நண்பர்களின் கல்யாண பத்திரிகிய்கள்  .......கழுவாத  டி கப்  --2 -...இன்றைய தினமலர் பேப்பர் ...
பழைய ஆனந்தா விகடன் .. அம்புட்டுத்தான்  சாமி ............

சிரிக்கவைக்கும் மூன்று  மனிதர்கள்
1. மன்மோகன் சிங் 
2. கருணாநிதி
3.
நடிகர் விஜய்

மீதி    -தொடரும் ........

போன -பதிவு பாராட்டிய  உள்ளங்களுக்கு
இராஜராஜேஸ்வரி- கலகல பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.- உங்கள்  அன்புக்கும்,  பாசத்துக்கும்  மிக்க நன்றிகள் ....மிக்க நன்றிகள். 
பன்னிகுட்டி ராமசாமி -ஆஹா.... நல்லாருக்கே.....:- நன்றிகள் ஆயிரம்....
          பன்னிகுட்டி ராமசாமி-திரட்டிகள்ல இணைக்கலையா?:  முடிந்தவரை  முயற்சி  செய்து ........இணைத்து உள்ளன் .
நான் அதக்கு சரிப்பட  மாட்டனா!!!!!!!!!!! தவற்கள்  உண்டு ...try to later...anpudan -Gnanam
தமிழ் வாசி -பிரகாஷ்-நீங்கள் தேதியை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றி முயற்சியுங்கள்.-முயற்சி செய்து  வெற்றி பெற்றன்-Timely help......Thanks lot.......நன்றி தமிழ் "பிரகாஷ் "
             பன்னிகுட்டி ராமசாமி-ஏனுங்.... நீங்க ஜூலைலதான் பதிவே எழுத ஆரம்பிச்சிருக்கீங்க, அதுக்கு முன்னாடியே நெல்லை பதிவர் சந்திப்புல எப்படி? ஆபீசர் வரட்டும் இன்னிக்கு பஞ்சாயத்த கூட்டிர வேண்டியதுதான்.
என்னோட குரு -"நெல்லை தளபதி "ஆபீசர் அவர்கள் ....என்னோட பலைய( old) பதிவு  கண்டு ---maduraiidly.blogspot.com-   என்னை மாற்றி உள்ளார் ...நம்மா  நாட்டாமை  அவர்  தானுக ..............
சித்ரா said -Click this link for step by step instructions to add the "Follower's Widget" to your blog. http://www.google.com/support/blogger/bin/answer.py?hl=en&answer=141483-
Thanks lot mam....i will do it Done mam.....welcome to my blog mam.... i am surprise..Thank u.
கௌசல்யா மாம்-
//நெல்லை மண்ணை காக்க போராடும் // ஏன் ஏன் ஏன் இப்படி மாட்டிவிடுரீங்க ? :)) உங்களின் நகைசுவை ரசிக்கவைக்கிறது..
தொடர்ந்து எழுதுங்கள் ! என் அன்பான வாழ்த்துக்கள் !-
வருகைகும்...   வாழ்த்துக்கும்  என் இனிய  நன்றிகள்  கௌசல்யா mam ....நான் உண்மையைதான்  சொல்கின்றன்....
# கவிதை வீதி # சௌந்தர்-எல்லாமே சூப்பர்...  Wow....Thank u nanpa...
கோமாளி செல்வா -
கீழ போட்டிருக்கிற கார்ட்டூம் செமங்க :)- Thanks nanpa ...
Bloggers--RJ-Selva---உங்களின் நகைசுவைகு  நான் அடிமை .....வருகைகும்...   வாழ்த்துக்கும்  என் இனிய  நன்றிகள்
  
Thangasivam B.Pharm,M.B.A,DPH said...என்ன மறந்திட்டீங்களே.....ங்களை மறக்க முடிமா ? எம்புட்டு படிப்பு ..அசத்தல் தங்கசிவம் 

 மதுரை சரவணன் said...சூப்பர் -Thans a lot nanpa.....me to madurai.

சி.பி.செந்தில்குமார் said. கலகல பதிவு, வாழ்த்துக்கள்- வசிட்டர் வாயால் பெரமரிஷி பட்டம் ...வருகைக்கும் வாழ்த்துக்கும்  நன்றிகள்  சி .பி
  
காமெடி corner 






Post Comment