Sunday, January 22, 2012

ஒரு பதிவரின் மனசு ஒரு பதிவருக்குத்தான் புரியும்.

என் இனிய  நண்பர்களுக்கு ...ஒரு 45 நாள்களுக்கு  பிறகு சந்திக்கிறோம் .
அடிகடி உங்களை சந்திக்க ஆவல் .சில  குடும்ப சூழ்நிலை ..இந்த இடைப்பட்ட 
நாள்களில் நண்பன் ,மௌனகுரு படம் இரண்டும் பார்த்து ...ஓகே...
நன்றாக இருந்தது .
பார்க்க (உண்மையில்) நினைத்தது மேதை படம் .வாய்ப்பு அமையவில்லை.  பிலாசபி பிரபாகர் , மெட்ராஸ் பவன் சிவகுமார் ,
ரத்தினவேல் சார் மற்றும் பழனிவேல் 
ஆகியயோருடன் (செல் )ல்ல
உரையாடல்கள்  இனிமை .
மிஸ் பண்ணியது  ஈரோடு பதிவர் சந்திப்பு மற்றும்  உணவு உலகம் திரு சங்கரலிங்கம்  சார்  அவர்களின் இருநிகழ்ச்சிகள் ...அப்புறம் சாரி கெளசல்ய மாம் .தாங்கள் முன்னின்று
நடத்திய நிகழ்ச்சியில் இந்த எளியவனை அழைத்தும் கலந்து கொள்ள இயலவில்லை மன்னிக்கவும்.
இனி  இரண்டு தகவல்கள் .
விரைவில் :-இந்த யானைக்குட்டி ப்ளாக். மாத  இருபக்க  இதழாக  மலர்கிறது .(திருநெல்வேலி பகுதி மட்டும் .) தங்களின் அன்பையும் ஆதரவையும் 
பணிவன்புடன் கேட்கிறான்  யானைக்குட்டி .

அப்புறம் மேன் மக்கள் மேன்  மக்கள் தான்  Thank  u  ஜாக்கி சேகர் சார் .
அதிங்க பிரசிங்கதனமாக நான் எழுதியதை பொருத்து கொண்டு எம்புட்டு 
அழகாக தாங்கள் எழுதி உள்ளீர்கள் . மிகவும் நன்றி  நன்றி .

Re: [JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)] New comment on வலையுலகம்,சகபதிவர்கள்,வாசகநண்பர்கள், நன்றிகள்.
Inbox
x

jackiesekar dtsphotography@gmail.com
10/22/11

to me
இயல்பாய் இருந்தது உங்க பின்னுட்டடம்..
உங்கள் பின்னுட்டம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது மிகவும் நெகிழ்ச்சியாகவே உணர்ந்தேன்.. மிக்க நன்றி...
jackiesekar dtsphotography@gmail.com


2011/10/21 யானைகுட்டி @ ஞானேந்திரன் <yannaikutty@gmail.com>
யானைகுட்டி @ ஞானேந்திரன் has left a new comment on your post "வலையுலகம்,சகபதிவர்கள்,வாசகநண்பர்கள், நன்றிகள்":

யார்ற இந்த ஆளு!!
பார்க்க கிறுக்கு பய மாதிரி இருக்கான்????
ஆன! என்னமோ !விசயம் இருக்கு ...பழகி பார்போம் .
(மன்னிக்கவும் ) படித்து பார்போம் .என்றுதான் உங்கள்
ப்ளாக் வந்தான் இந்த .-யானைக்குட்டி -
டெய்லி எங்கோ !sb .பாலசுப்ரமணியன் பாட்டு...கேட்டு விடுவது போல
உங்கள் ப்ளாக் டெய்லி பார்த்து விடுவன்.
உங்கள் எழுத்தில் 'உயிர் 'உள்ளது .
உங்களின் இடம் *-ப்ளாக் உலகில் ...தனி சிம்மாசனம் உடையது.
வாழ்த்துக்கள் இன்னும் வளர .....

-யானைக்குட்டி -




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு சில  சமயங்களில்

ஒரு பதிவு உருவாகும் கதை....








என்னமோ! மனம் ! மிகவும்
லேசாக லேசாக ...........
உள்ளது .........
கண் முன் உலகம்....
சற்று பிடிக்காமல் ..
என்னை பிடித்துகொண்டு உள்ளது .
விரல்கள் மேலும்  டைப்
செய்ய முடியாமல் ...
இதமாக வலிக்கிறது...
மூளை எதனையும் யோசிக்க
மறுக்கிறது....
எனக்கு  புரிகிறது .....
ஆனாலும் .....
என்னமோ புரிய மறுக்கிறது.
என்ன ஆனாலும் சரி ....

நான் இன்று கண்டிப்பாக ஒரு பதிவு எழுதுவேன்.

யாரும் தப்பிக்க முடியாது .!


(ஒரு பதிவரின் மனசு ஒரு பதிவருக்குத்தான் புரியும்)


*****************************************************************



(வினோ)தம் !


ABCD  சரியாக ...
சொன்ன என் பிள்ளைக்கு ..
அ. ஆ  மட்டும் ..
வரவில்லை .....
பெருமையாய் சொன்னாள்  
மனைவி தமிழரசி ...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அட ஆண்டவா !!!!!!!!!

கோவில் யானை .
ராஜ அலங்காரத்தில
ஒரு ரூபாய்  பிச்சைக்கு
தலை தடவி ....
வாழ்த்தியது .....


+++++++++++++++++++++++++++++++++++++++++





 
இது...என்னால் முடியாது ...
இது   கடினம் இங்குதான்  தோல்வி ஆரம்பம் .

இது கடினம்தான்  ஆனால் என்னால் முடியும் !!!!..
 இங்குதான் வெற்றி ஆரம்பம் ..




+++++++++++++++++++++++++++++++++++++++++++++

சொல்ல மறக்காத கதை



என் இறகுகள் வலிக்கின்றன....
மரங்கள் தென்படவில்லை ...
என் இறகுகள் வலிக்கின்றன....
போகும் தூரம் தெரியவில்லை
என் இறகுகள் வலிக்கின்றன....
இதற்கு மேல் எனக்கு சக்தி இல்லை...
ஆனாலும் ....ஆனாலும்
என் உணவை
என் கூட்டில்  யாரும் ....
வைப்பதில்லை!!!!! 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 ரசித்த படங்கள் 
இதற்குத்தான் ஆசை பட்டாய பாலகுமார!!!!!!!!!!!!!!!!!!!!!!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை மெரினா  (சென்னை உங்களை வரவேற்கிறது ! புரிகிறதா !)





இயக்கம்@கருத்து @கவிதை : யானைக்குட்டி


தயாரிப்பு@ஒளிபதிவு : கூகுள

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோக் CARNER 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




Post Comment

15 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீண்ட இடைவெளிக்கப்புறம் வந்திருக்கீங்க, இருந்தாலும் பதிவு சுவராசியம்தான்....!

உணவு உலகம் said...

டிசம்பர்-1லயே, போஸ்ட் ட்ராஃப்ட்ல வச்சிட்டீங்களா? ஆனால் நல்லாருக்கு.

கோகுல் said...

உங்க மனசு எனக்கு புரியுதுங்க.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள்.

Sivakumar said...

//விரைவில் :-இந்த யானைக்குட்டி ப்ளாக். மாத இருபக்க இதழாக மலர்கிறது //

ஒருபக்கம் சரி. மறுபக்கத்தை கம்ப்யூட்டருக்கு பின்னால போயி படிக்கணுமா தலைவா :)

Sivakumar said...

ஜாக்கியின் பின்னூட்டம் நன்று.

Sivakumar said...

//மூளை எதனையும் யோசிக்க
மறுக்கிறது....
எனக்கு புரிகிறது .....
ஆனாலும் .....
என்னமோ புரிய மறுக்கிறது.//

என்னமோ சொல்ல வர்றீங்க....கர்த்தா காப்பாற்று!!

Admin said...

கவிதைகளும், படங்களும் ரசிக்க வைத்தது. குறிப்பாக "சொல்ல மறக்காத கதை" கவிதை அருமை.

செல்வா said...

திரும்ப வந்ததற்கு மகிழ்ச்சிங்க. கவிதைகள் நல்லா இருக்கு. முக்கியமா அந்த A,B,C,D கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :))

படங்கள் உங்களுக்கு மட்டும் எங்க கிடைக்குதுனு தெரியலை. ஆனா நல்ல ரசனையா இருக்குங்க :)))))))

Unknown said...

வாழ்த்துக்கள் மாப்ள...லேட்டா வரல லேட்டஸ்ட்டா வந்து இருக்கீர்!

Unknown said...

வினோதம், அட ஆண்டவா, சொல்ல மறக்காத கவிதை இவைகள் அற்புதம்.

ADMIN said...

///இது...என்னால் முடியாது ...
இது கடினம் இங்குதான் தோல்வி ஆரம்பம் .

இது கடினம்தான் ஆனால் என்னால் முடியும் !!!!..
இங்குதான் வெற்றி ஆரம்பம் ..
///

நான்கே வரிகளில் வெற்றியின் சூட்சுமத்தை 'நச்'சென்று சொல்லியிருக்கிறீர்கள். பதிவில் இடம்பெற்ற அனைத்தும் ரசித்து படிக்கும்படியாக இருந்தது. தொகுத்து பகிர்ந்தமைக்கு நன்றி ஞானேந்திரன் அவர்களே..!!

சி.பி.செந்தில்குமார் said...

ஹா...ஹா...வெல்கம் பேக்.

MANO நாஞ்சில் மனோ said...

ABCD சரியாக ...
சொன்ன என் பிள்ளைக்கு ..
அ. ஆ மட்டும் ..
வரவில்லை .....
பெருமையாய் சொன்னாள்
மனைவி தமிழரசி//

சும்மா நச்சின்னு தலையில கொட்டிட்டீங்க, வெல்கம் பேக் மக்கா வாழ்த்துக்கள்....!!!!