Friday, October 14, 2011

தமிழ் மணம்- வாங்க!!!பழகலாம் (மன்னிக்கவும்) தகுதி இல்லை ! வாங்க விலகலாம்!!!!


பதிவு உலகில்  "நாங்கள்"
மிகவும் மென்மையானவர்கள் !
 
எங்கள் இதயங்களை கிழித்தால்...
அதில் !
அப்போது !
"பூத்த பூக்களின் மணங்களை !"
 மட்டும்.  எப்போதும் காணலாம் ....
 
எனது சக நண்பனின். மற்றும்
நண்பனின்  நண்பன் அவர்களின்
வழி மற்றும் வலி.!
அது எனது  மற்றும் எங்களின்
 வழி மற்றும் வலி.!
 
இப்போதும்! எங்களுடன் தமிழ் உண்டு .
ஆனால் அதற்க்கு தனி மனம் @ மணம் உண்டு .
 
நாங்கள் அன்பின் ஏசு  தான்!  அது .
ஆனி அடிபவனின் சுத்தியல்க்குதான்!
தெரிவதில்லை !!
ஆனால் அடிப்பவனுக்கு ..!!!!!.
 
எதிரி என்றாலும் எங்களை.... 
கண்டிக்கவும் தவறு என்றால்
தண்டிக்கவும் உரிமை உண்டு .
ஆனால் விமர்சிக்க..............
அதற்கு !!!.....
 
வேண்டாம் ...........
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் ..
நீங்கள் நீங்களாக ! இல்லை.!!
அதான் வருத்தம்!!!!  இப்போது.
நண்பனாக பிரிவோம் ...
பிறகு  சந்திப்போம்! சக மனிதனாக!!


அன்புடன்
யானைக்குட்டி
 




கண்டனம் !!!!!

என் குழந்தை இட்ட,
முத்தத்தின்,,,,,,,,,,,
ஈரத்தை .....நான்!
முழுமையாக ....
உணர்வதற்குள் ,,,,
களவாடியது காற்று
.

-யானை குட்டி -

-------------------------------------------------------------------------
 நான் ஒரு கமல் ரசிகன் என்பதால் ரஜினி  ரொம்ப பிடிக்கும் .
ரஜினி  பிடிக்க பல காரணம் உண்டு .
அதில் இதுவும் உண்டு .
ரஜினி சொல்லும் கவலை போக்கும் வழி.
மக்கள் கூடும் இடம் ...மகாலட்சுமி வாசம் செய்வாள் ...என்ற கருத்து.
தான் தண்ணி  அடித்த கதை ....தான் சொத்து வாங்கிய  கதை ....
அசத்தல் வீடியோ ......


------------------------------------
இந்த வீடியோ பார்க்க ஆடியோ தேவை  இல்லை! ஆர்வம் மட்டும்  போதும் .



--------------------------------------------------


என் இனிய அன்பு உள்ளங்கள்  அனைவர்க்கும் .
ஒரு அன்பின் போட்டி .....
இந்த படம் என்னமோ !சொல்கிறது ..
அது நான்கு வரி கவிதையாக இருக்கலாம் .
அல்லது நான்கு வரி வார்த்தையாக இருக்கலாம் .
என்னமோ !எனக்கு பிடிபடவில்லை ?
நீங்கள் சொல்லுங்கள் ..
கலந்து கொள்ளும் அனைவருக்கும்
ஒரு இனிய எளிய அன்பு பரிசு
உண்டு ,
"மெகா அன்பு பரிசு " நச்சுனு.. சொல்லும் ...
மூவர்க்கு.. 
வரும் ---25 /11 /2011 --க்குள் ..நச்சுனு.. சொல்லுங்கள் ...

Post Comment

31 comments:

SURYAJEEVA said...

நல்ல பாம்பு...
நல்ல பாப்பா...
நம்பிக்கையில்;
பூத்தது புன்னகை...

உணவு உலகம் said...

சின்ன பெண் சிரிக்கின்றாள்
சீரும் பாம்பை
அறிந்தா, அறியாமலா?

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

சூர்யா ஜீவா வாங்க !வாங்க !
அருமையான வார்த்தைகள் !
வாழ்த்துக்கள் !
வருகைக்கும் ,உங்கள் இனிய
கருத்துக்கும் .
நன்றிகள் ....நண்பா..

இராஜராஜேஸ்வரி said...

படையும் நடுங்கும் பாம்பென்றால்
புன்னகைபூக்கும் பாப்பாவின் வதனம்
பாம்பையும் கட்டிபோடும் மகுடியோ!
படமெடுக்கும் பாம்பும் மயங்கும் அன்பில்

இராஜராஜேஸ்வரி said...

சீறும் பாம்பை நம்பும்
சிரிக்கும் பாப்பா அன்பு!
சிரிப்பென்ன்னும் மகுடியால்
சீறும் பாம்பை மடக்கும் பாப்பா!

Unknown said...

மாப்ள பகிர்வுக்கு நன்றி... துட்டு இருந்தா தான் மனுசன மதிப்பாங்க போல..ஹிஹி..இளங்கன்று பயமறியாது அந்த போட்டோ எனக்கு உணர்த்தியது!

Vijay Saravanan said...

உன் அழகுப்புன்னகை மகுடிக்கு, நல்ல பாம்பும் மயங்கி ஆடிடுமே!!

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

திரு சங்கரலிங்கம்(FOOD ) சார் !
வாங்க !வாங்க !
அருமையான வார்த்தைகள் !
வருகைக்கும் ,
கருத்துக்கும் .
நன்றிகள் ....
நன்றிகள் ....
நன்றிகள்

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

இராஜராஜேஸ்வரி மாம் ,
இரண்டு விதமான சொற்பதங்களை பதிந்து
உள்ளீர்கள் .மிக அருமை .வருகைக்கும் ,உங்கள் இனிய
கருத்துக்கும் .
நன்றிகள் பல ......
நன்றிகள் பல ......

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

விக்கியுலகம் -மாம்ஸ் .
வாங்க! வாங்க! வாங்க !
வார்த்தை உங்கள் வசப்பட்டு ...சொல்லாக மாறி விட்டது .
கலக்கல் ....வருகைக்கும் ,உங்கள் இனிய
கருத்துக்கும் .
நன்றி மாம்ஸ் ....

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

Vijay சரவணன்-
வாங்க !வாங்க !
அருமையான வார்த்தைகள் !
வருகைக்கும் ,
கருத்துக்கும் .
நன்றிகள் நண்பா....
நன்றிகள் நண்பா.
நன்றிகள் நண்பா.

செல்வா said...

உங்க முதல் கவிதை நல்லா இருக்குங்க. அதவிட முதல் இரண்டு புகைப்படங்கள் அருமையோ அருமை!

அப்புறம் நானும் கமல் ரசிகன்தான். :)

MANO நாஞ்சில் மனோ said...

அன்பு காட்டினால்
கெட்ட பாம்பையும்
கட்டி போடலாம்...

MANO நாஞ்சில் மனோ said...

கோமாளி செல்வா said...
உங்க முதல் கவிதை நல்லா இருக்குங்க. அதவிட முதல் இரண்டு புகைப்படங்கள் அருமையோ அருமை!

அப்புறம் நானும் கமல் ரசிகன்தான். :)//

இந்த ராஸ்கல் நேரத்துக்கு ஒரு பொய் சொல்வான் நம்பாதீங்க பாஸ்...

ISR Selvakumar said...

சில நேரம் முழுமையான பதிவுகளை விட இது போன்ற துணுக்குக் கோர்வைகள் சுவாரசியமாக இருக்கும்.

K.s.s.Rajh said...

நல்ல தொகுப்புக்கள் பாஸ்

K.s.s.Rajh said...

////நான் ஒரு கமல் ரசிகன் என்பதால் ரஜினி ரொம்ப பிடிக்கும் ./////

இந்தப்பண்பு ரஜனி கமல் ரசிகர்களைத்தவிர வேறு எந்த நடிகர்களினதும் ரசிகர்களுக்கு வராது

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

RAMA RAVI (RAMVI) said...

நன்றி ஞானேந்திரன்,என் பதிவிர்க்கு வந்து கருத்து சொன்னதற்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கவிதை அருமை...!

சி.பி.செந்தில்குமார் said...

குட்

சந்திர வம்சம் said...

மகுடிக்கு மயங்கும் பாம்பு
உன் மயக்கும் புன்னகைக்கும்
மயங்கும்!(பத்மாசூரி)

vimalanperali said...

மனம்தொட்ட நல்ல கவிதை.நல்ல படங்ககள்.நல்ல பதிவு.பாம்பின் பக்கத்தில் படுத்திருக்கும் குழந்தை.ஏதோ ஒரு சமூக குறியீடாகத்தெரிகிறது.

settaikkaran said...

பாம்பைப் பார்த்துச் சிரிச்சிட்டிருக்கு அந்தப்புள்ளே? செம தில்லு!

ம.தி.சுதா said...

அந்தக் காணொளி மிகவும் நம்பிக்கையூட்டுகிறது...

மிக்க நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஒரு பூவின் தலையில் இன்னுமொரு பூ ! முதல் படம்
நல்லா கவிதை எழுதுறீங்க, தொடர்ந்து எழுதுங்கள் .
இரண்டாவது மூன்றாவது படம் செல்வாவுக்கு ரொம்ப பிடித்த படம் அதான் இன்ஸ்டன்ட் கமெண்ட் வந்து விட்டது

தேன் நிலா said...

பல்சுவை பதிவு..வாழ்த்துக்கள் நண்பரே..!!

துபாய் ராஜா said...

சீறும் பாம்பை நம்பும்
சிரிக்கும் பெண்ணை
நம்பலாமா....

-------------

நாகமும் பெண்ணைப் பார்த்து
சிரிக்கத்தானே செய்கிறது.

--------------

நாகமும், நரகமும் அருகருகில்...

------

Admin said...

புகைப்படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது.

//என் குழந்தை இட்ட,
முத்தத்தின்,,,,,,,,,,,
ஈரத்தை .....நான்!
முழுமையாக ....
உணர்வதற்குள் ,,,,
களவாடியது காற்று.//

அருமையான வரிகள்.

J.P Josephine Baba said...

ஏதோ நடந்துள்ளது தமிழ்மணத்தில். கவிதை அருமை!

nellai ram said...

பல்சுவை பதிவு..வாழ்த்துக்கள் நண்பரே..!!