திருமணம்
நிச்சயிக்கப்பட்டவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்குத்தான் இந்த
கட்டுரை. மற்றவர்கள் படிக்கவேண்டாம் என்றில்லை. படித்து பிறருக்கு ஆலோசனை
கூறவேண்டும் என்று நினைப்பவர்களும் இதை படிக்கலாம். என்ன ஒரே சஸ்பென்சாக
இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம் விசயம் அத்தனை முக்கியமானது.
திருமணமான தினத்தன்று காலையில் முகூர்த்தம் முடிந்த உடனே இரவு
நடக்கப்போகும் சாந்தி முகூர்த்தம் பற்றி பேசி புதுமணத் தம்பதிகளை திகிலில்
ஆழ்த்துபவர்கள் தான் அதிகம் பேர் இருப்பார்கள். ஆனால் அவசரப்படாமல் ஆற அமர
முதலிரவை வைத்துக்கொண்டால்தான் அது சுக இரவாக இருக்கும் என்கின்றனர்
உளவியல் வல்லுநர்கள். தம்பதியர் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளும் இரவில்
அதாவது முதலிரவில் நிம்மதியாக இருவரும் தூங்குங்கள் என்பதுதான்
உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் அறிவுரை.
அடப்போங்க சார்.
யாருக்காவது முதலிரவில் தூக்கம் வருமா? என்று கேட்பது காதில் விழுகிறது.
வேறு வழியில்லை கண்டிப்பாக அன்றைய தினம் தூங்கினால்தான் தொடரும் நாட்களில்
சிக்கல் இல்லாமல் வாழ்க்கையை சந்திக்க முடியும் என்கின்றனர். ஏனெனில்
என்னதான் சுற்றம் சூழ தாலி கட்டி மனைவி ஆக வந்து விட்டாலும் சந்தித்த முதல்
நாளன்றே தாம்பத்ய உறவை தொடங்குவது சரியில்லை என்பது உளவியல் வல்லுநர்களின்
கருத்து.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள்முதல் சடங்கு
சம்பிரதாயங்கள் என்ற பெயரில் ஆண், பெண் இருவருக்குமே ஏகப்பட்ட அலைச்சல்
இருக்கும். திருமண தினத்தற்கு வீட்டிலும், சத்திரத்திலும் ஒரே கூட்டமும்
கும்மாளமுமாய், இருந்திருக்கும். தண்ணீர் மற்றும் கழிவறை பிரச்சினையினால்
அவசரக்குளியல் என இருவரின் உடல்களுமே சுத்தமாக இருக்காது. இதனால் பரவும்
நோய்களும் அதிகம், இதனால் தான் திருமண தினத்தன்றே தாம்பத்ய உறவை
வைத்துக்கொள்வது ஆரோக்கியமானதல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.
முதல்நாளே உறவைத் துவங்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் ஏற்படும்
வாய்ப்புகள் அதிகமாம். பிறப்புறுப்பை பாதிக்கும் பல வியாதிகள் வர
வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற
சூழ்நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் இந்த வியாதிகள் கட்டாயம்
வருமாம்.
முதலிரவன்று இதமான வெந்நீரில் நன்றாக குளியுங்கள். ஆடம்பர
நகைகள் மற்றும் உடைகளை தவிருங்கள். அளவோடு மிதமான உணவாக உட்கொள்ளுங்கள்.
அன்றைய தினம் சம்பிரதாயத்திற்காக வைக்கும் பால், பழம், இனிப்புகளை
சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. உடலும் மனமும் லேசாக இருந்தலே
பாதி டென்சன் பறந்துவிடும்.

முதல்நாளன்றே ஒருவருக்கொருவர் தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில்
எதையாவது செய்யப்போய் அதுவே சிக்கலாகிவிடும் ஜாக்கிரதை. இதனால்
இருவருக்குமிடையே அதிருப்தி உருவாகலாம். எனவே முதலிரவன்று
புதுமணத்தம்பதியர் இருவரும் மனம் விட்டுப்பேசிக்கொள்ள நிறைய நேரத்தை
எடுத்துக்கொள்ளலாம். விருப்பு, வெறுப்பு, குடும்ப சூழ்நிலை, பற்றியெல்லாம்
பேசலாம்.
சின்னத் தொடுகை. மெல்லியதாய் ஒரு ஸ்பரிசம், போதும் அதுவே
ஆயிரம் மடங்கு அன்பை இருவருக்குமிடைய உணர்த்துவதற்கு. தயக்கமும், கூச்சமும்
களைந்த பின்பே தாம்பத்ய உறவை தொடங்குவதே ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை
என்கின்றனர் மருத்துவத்துறையினர். இந்த கட்டுரை பெற்றோர் பார்த்து நிச்சயம்
செய்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல. காதல் திருமணம்
செய்பவர்களுக்கும் பொருந்தும்.
எனவே முதலிரவை, ஒரு நீ்ண்ட இனிய
நாவலின் முன்னுரையாக கருதி நிதானமாக ஆரம்பியுங்கள். பிறகு பாருங்கள்,
வாழ்க்கை நாவலின் ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க இனிமையாக இருப்பதை
உணர்வீர்கள்.
---------------------------------------------------------------------------------------------------------
இன்ஜினியராக உள்ள இரண்டு மகன்களையும் படிக்க
வைத்ததும்,
என் கிச்சன் தான்
"குக்கரி ஆசிரியர்' சூர்யாபிறந்து வளர்ந்ததெல்லாம்,
பெங்களூரு தான்.
என் கணவர் கணேசின் ஊர் திண்டுக்கல். திருமணம் முடிந்த
பின், மைசூருக்கு குடிபெயர்ந்தோம்.என் அம்மா என்னையும், சகோதரிகள்
மூவரையும் பொழுது போக்காக, சமையல் கற்றுக் கொள்ள அனுப்பினார். அது தான்,
என் வாழ்க்கைக்கு பெரும் ஆதரவாக உள்ளது. என் இரு பிள்ளைகளும் பிறந்து,
அவர்கள் பள்ளி சென்ற பின், கேட்டரிங் கிளாஸ், பேக்கிங் கிளாஸ் என்று
கற்றுக் கொண்டேன்.ஒரு முறை, பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்ணிற்கு
சமையல் கற்றுக் கொடுத்தேன். அவரின் கைப்பக்குவத்தை ரசித்த அனைவருக்கும்,
அவர் என்னை அறிமுகப்படுத்த, நிறைய பேர் வந்துவிட்டனர் சமையல் கற்றுக்
கொள்ள.கூட்டம் பெருகியதால், அதை ஒருங்கிணைக்க ஒழுங்குமுறை தேவைப்பட்டது.
கைடு தயாரித்து, நோட்ஸ் கொடுத்து, பல பேட்ச்களாக வகுப்புகளைப் பிரித்து,
முறையான, "குக்கிங் பள்ளி' யானது என் சமையல் அறை. கற்றுக் கொள்பவர்களின்
சந்தேகங்களை பொறுமையாக களைவதால், மாணவர்களிடம், "நல்ல ஆசிரியர்' பெயர்
வாங்கிக் கொடுத்தது.கணவரின் பிசினஸ் மிகவும் டல்லாகி சிரமப்பட்டபோது,
குடும்பச் செலவுகளை தாங்கியது, பொழுபோக்கிற்காக நான் கற்றுக் கொண்ட சமையல்
கலை வருமானம் தான். இப்ப, இன்ஜினியராக உள்ள இரண்டு மகன்களையும் படிக்க
வைத்ததும், என் கிச்சன் தான். என்ன தெரியும் எனக்கு என நொந்து கொள்ளாமல்,
தெரிந்த சமையலைக் கொண்டே கை நிறைய சம்பாதிக்கலாம், சாதிக்கலாம்!
..............................................................................................................................................
ஒரு நாளைக்கு 32 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழை எனப்படுகின்றனர்.
புதுடில்லி :""நம்நாடு சுதந்திரம் அடைந்த போது வறுமைக்கோட்டுக்கு கீழ்
இருந்தவர்களின் எண்ணிக்கை, 32 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை,
40 கோடியாக உயர்ந்துள்ளது,'' என தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்
என்.சி.சக்சேனா தெரிவித்துள்ளார்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, ரேஷன் அட்டை கொடுக்கப்பட்டு மானிய
விலையில் உணவு தானியங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த ரேஷன் அட்டையை
வைத்திருப்பவர்களில் 60 சதவீதம் பேர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள்.
இதில், பரிதாபம் என்னவென்றால் உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள
20 சதவீதம் பேருக்கு இந்த ரேஷன் அட்டையே கிடையாது.
..........................................................................................................................................
வளைந்து, நெளியும் தன்மை கொண்டது. கீழே விழுந்தாலும் உடையாது.
ஸ்கின் என்ற பெயரில் புதிய மொபைலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்ய உள்ளது
சாம்சங் நிறுவனம். கிராபின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல்போனின்
பேனல் வளைந்து, நெளியும் தன்மை கொண்டது. கீழே விழுந்தாலும் உடையாது.
இந்த மொபைலின் எல்சிடி திரையும் வளைந்து நெளியும் என்பது கூடுதல் சிறப்பு.
இதில் 8 மெகா பிக்ஸல் வசதி கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 1.2 ஜிஎச்இசட் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வசதி கொண்டது.
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
"தோல்வியை அனுபவித்தவனுக்குத்தான் வெற்றிகளை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது புரியும்."
ஒரு விழாவில், தங்கர்பச்சான் கலந்துகொண்டு பேசும்போது, அழகி படத்தை
எடுத்துவிட்டு தான் பட்ட அவமானங்களை வெளிப்படையாகக் கூறி அதிரவைத்தார்.
"நான் இயக்கிய 'அழகி' படம், ஒரு கோடியே எழுபது லட்சம் செலவில்
தயாரிக்கப்பட்டது. தயாரிப்பாளர் பாதி விலைக்கு விற்க முன்வந்து, அந்த
படத்தை 120 முறை திரையிட்டு காண்பித்தும் யாரும் வாங்க முன்வரவில்லை.
அது கூட பரவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டும். என்னை
அவர்கள் அவமானப்படுத்தியது போல், அவர்களின் பெயர்களை சொல்லி நானும்
அவமானப்படுத்த விரும்பவில்லை.
தயாரிப்பாளராகவும், மிகப்பெரிய
இயக்குனராகவும் இருக்கக்கூடிய ஒருவர் படம் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை
கூட பேச விரும்பாமல், முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார்.
இதுவும்
கூட பரவாயில்லை. இன்று கூட மிகப்பெரும் தயாரிப்பாளராக இருக்கக்கூடிய
மற்றொருவருக்கு முதல் ஆளாக 'அழகி' படத்தை திரையிட்டு காண்பித்தேன். அவர்
என்னிடம் எந்த கருத்தும் சொல்லாமல், தயாரிப்பாளரை அழைத்தார். "தவறாக
எடுத்துக்கொள்ளாதீர்கள். செலவு செய்த பணம் இதோடு போகட்டும். இந்த படத்தை
ரிலீஸ் செய்தால், மேலும் ரூ.50 லட்சம் தேவைப்படும். உங்களுக்கு போஸ்டர்
காசு கூட திரும்பி வராது. இதை இப்படியே விட்டுவிட்டு ஊருக்கு
ஓடிவிடுங்கள்,'' என்று கூறிவிட்டு சென்றார்.
இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த துறையில் இருக்கிறார்கள். ஆனால் என்னை
அவமானப்படுத்தியவர்களின் கணிப்பை எல்லாம் மீறி, 'அழகி' படம் எவ்வளவு பெரிய
வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது என்று உங்களுக்கே தெரியும்.
தோல்வியை அனுபவித்தவனுக்குத்தான் வெற்றிகளை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது புரியும்.
-----------------------------------------------------------------------------------------
Thanks.Thatstamil/Dinamalar
பாச பார்வைகள் !!!!